Home இலங்கை சமூகம் இரண்டாவது நாளாக தொடரும் பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் பாடசாலை ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம்

0

பாடசாலைகளில் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் இரண்டாம் நாளாகவும் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தங்களுக்கான ஆசிரியர் நியமனம் கிடைக்கும் வரையிலும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல கோரிக்கைகள்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இணைப்பு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கவேண்டும் என்றும் அத்தோடு அவர்களை ஏனைய திணைக்களங்களுக்குள் இடமாற்றக்கூடாது எனும் பல கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

இதேவேளை நேற்றையதினம் முதலாவது நாளாக தங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version