Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

0

2024ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புலமைப்பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாக்கள் வெளியிட தடை

அத்தோடு, பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களை அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version