Home உலகம் கென்யாவில் வெடிக்கும் போராட்டம் : இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கென்யாவில் வெடிக்கும் போராட்டம் : இந்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

கென்யாவில் (Kenya)  வரி உயர்வை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்தியர்களை (India) பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆபிரிக்கா (Africa) நாடான கென்யாவில் வரி உயர்வுக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளதுடன், நேற்று  முன்தினம்  கென்யா நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 05 பேர் உயிரிழந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கென்யாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

போராட்டங்கள்

“கென்யாவில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் யாரும் வெளிவர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுகிறோம். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என தூதரகம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version