Home இலங்கை குற்றம் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது தாக்குதல் – அதிகரிக்கும் வன்முறைகள்

தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது தாக்குதல் – அதிகரிக்கும் வன்முறைகள்

0

மொனராகலையில் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது குப்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கையை முடித்துக் கொண்டு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பஸ் மீது தாக்குதல்

மொனராகலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முறைப்பாடுகள் 

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,295 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,425 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

NO COMMENTS

Exit mobile version