Home அமெரிக்கா சிக்காக்கோவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 4 பேர் பலி

சிக்காக்கோவில் துப்பாக்கி சூடு: குறைந்தது 4 பேர் பலி

0

அமெரிக்க சிக்காக்கோவில் நேற்று(03) இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் குறைந்தது
4 பேர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இரவுக் களியாட்ட நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்கள்
வெளியேறிக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவு 11 மணியளவில் குறித்த இரவுக்களியாட்ட நிலையத்தை கடந்து சென்ற கார்
ஒன்றில் இருந்தே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னணி வெளியாகவில்லை

சம்பவத்தில் 24 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பேர் உயிரிழந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்பில் எவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும் தகவல்
வெளியாகவில்லை. 

NO COMMENTS

Exit mobile version