Home முக்கியச் செய்திகள் கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு

0

கொழும்பு (Colombo) இரத்மலானை (Rathmalana) தொடருந்து நிலையத்தில் கொள்ளையிட முற்பட்ட குழு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலே ஒருவர் காயமடைந்துள்ளார்.

 துப்பாக்கிச் சூடு

இதன்போது இடம்பெற்ற மோதலின் போது பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும், தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version