Home இலங்கை அரசியல் நாட்டை கட்டியெழுப்ப தேவையான முக்கிய அம்சம்: பிரதமர் விளக்கம்

நாட்டை கட்டியெழுப்ப தேவையான முக்கிய அம்சம்: பிரதமர் விளக்கம்

0

அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நாட்டை கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அலுவலகத்தில் இன்று (25.09.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள் மீதான பொது மக்களின் நம்பிக்கை இந்த நாட்டில் மிகக் குறைவாக உள்ளது.

பொது கருத்து

மக்கள் அரசாங்கத்தின் மீதும் அரச அதிகாரிகள் மீதும் எதிர்மறையாக நடந்துகொள்கின்றனர். அரச சேவைகள் அனைத்தும் பயனற்றது என ஒரு பொது கருத்து அனைவரிடத்திலும் நிலவுகின்றது.

ஆனால், நாம் அரச சேவைகளை செயற்றிறன் அற்றதாக கருதவில்லை. நாம் அதை செயற்றிறனாக வடிவமைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version