Home இலங்கை அரசியல் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர்! உடனடியாக களத்திற்கு சென்ற பிரதமர்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர்! உடனடியாக களத்திற்கு சென்ற பிரதமர்

0

கடுவெல பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 320 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடும் வெள்ளம்

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக இஹல போமிரிய ஜூனியர் பாடசாலையில் ( Ihala Bomiriya Jounior School) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டு, அவர்களின் நலம் மற்றும் உடனடித் தேவைகளைப் பற்றி பிரதமர் ஹரிணி விசாரித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version