Home இலங்கை சமூகம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்! வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்! வெளியான அறிவிப்பு

0

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பலத்த காற்று

அத்துடன் மேல், சபரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடுமென அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.       

NO COMMENTS

Exit mobile version