Home முக்கியச் செய்திகள் நாட்டில் பல பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் பல பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை 

இந்நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/heavy-rain-or-thunderstorm-sri-lanka-weather-1714780622?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version