Home சினிமா மாஸாக தயாராகிவரும் ரஜினியின் வேட்டையன் பட கதை என்ன தெரியுமா?.. வெளிவந்த தகவல்

மாஸாக தயாராகிவரும் ரஜினியின் வேட்டையன் பட கதை என்ன தெரியுமா?.. வெளிவந்த தகவல்

0

வேட்டையன்

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் வேட்டையன்.

ரஜினி-அமிதாப் பச்சன் கூட்டணியில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள இந்த படத்தில் ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர்.

டிஜே. ஞானவேல் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கும் படம் என்பதால் வேட்டையன் படம் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது என்றே கூறலாம். வரும் அக்டோபர் 10ம் தேதி படம் ரிலீஸ் என கூறப்பட்டுள்ளது.

காற்றுக்கென்ன வேலி சீரியல் புகழ் பிரியங்காவிற்கு அடித்த ஜாக்பாட்… என்ன விசேஷம் பாருங்க

வேட்டையன் கதை

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்க வேட்டையன் படத்தின் கதை இதுதான் என ஒரு கதை வலம் வருகிறது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக பலரை சுடும் ரஜினி இதனை பெருமையாகவும் நினைக்கிறார்.

பணியில் இருந்து ஓய்வுக்கு பிறகு அவர் சுட்டுக்கொன்ற குடும்பம் பற்றி அறிய நேரிடுகிறது, அந்த நிகழ்வு அவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நான் சுட்டுக்கொன்ற எல்லோர் வீட்டுக்கும் சென்று கொலைக்கு முன், பின் நடந்த விஷயங்களை கேட்டு அதிர்கிறார்.

இதனால் என்கவுன்டர் எனப்படும் அதிகாரப்பூர்வ கொலைகளுக்கு எதிராக பேச தொடங்குகிறார். இதுவே வேட்டையன் படத்தின் கதை என்று தகவல் உலா வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version