Home இலங்கை சமூகம் நடுக்கடலில் மாயமான கடற்றொழிலாளர்கள்: மீட்க பறக்கும் உலங்குவானூர்தி

நடுக்கடலில் மாயமான கடற்றொழிலாளர்கள்: மீட்க பறக்கும் உலங்குவானூர்தி

0

கடலில் கவிழ்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடுவதற்காக பெல் 412 விமானப்படை உலுங்குவானூர்தியை அனுப்புமாறு அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு மீன்பிடிப் படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடிப் படகும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

மீட்பு படகு

நேற்று (27) மாலை தேவேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 5 கடற்றொழிலாளர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது, மேலும் படகு ஒரு வணிகக் கப்பலில் மோதிய பின்னர் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விபத்தில் இருந்து ஒரு கடற்றொழிலாளர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார், மற்ற நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், கடற்படை ஒரு தேடுதல் நடவடிக்கை கப்பலையும் அனுப்பியுள்ளது.

மேலும் இருவர் மாயம்

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளையின் மொரகல்ல பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு கடற்றொழிலார்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நந்துன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நந்துன் குமார என்றும், அவர்கள் தனுஷ மரைன் என்ற சிறிய மீன்பிடி படகில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version