Home முக்கியச் செய்திகள் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் படுகொலை : மரணதண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் படுகொலை : மரணதண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

0

 முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமை தெடார்பாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, ஜோன்சன் கொலின் வலண்டினோ அல்லது வசந்தன் என்ற குற்றம்சாட்டப்பட்ட நபர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்த உத்தரவை இரத்து செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மரணதண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்

இந்த மனு நீதிபதிகள் யசந்த கோதாகொட, அசல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ, மனுவை விலக்கிக் கொள்ள அனுமதி கோரினார்.

மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மரணதண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.

 கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி காலை கொழும்பு கொட்டாஞ்சேனை சிவன் கோவிலில் இடம்பெற்ற புத்தாண்டு வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்ற முன்னாள் அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


you may like this

https://www.youtube.com/embed/tmWER13Jb_w

NO COMMENTS

Exit mobile version