Home முக்கியச் செய்திகள் சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

சட்டத்தரணி ஒருவரின் சட்டத் தொழிலை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

0

சட்டத்தரணி ஒருவரின்  சட்டத் தொழிலை இரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சட்டத்தரணி பணத்தைப் பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் முறையாக முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சரத் ​​விஜேசிறி டி சில்வா என்ற சட்டத்தரணியின் சட்டத் தொழிலை இரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

44 இலட்சம் ரூபா

இரண்டு காணி வழக்குகளில் முன்னிலையாகுவதற்காக குறித்த சட்டத்தரணி உரிமையாளரிடம் இருந்து 44 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் அந்த சட்டத்தரணி நீதிமன்றத்தில் முறையாக முன்னிலையாகவில்லை என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டத்தரணி தொழிலில் இருந்து விலக்கப்பட்ட  அவர் மூன்று மாதங்களுக்குள் மூன்று மில்லியன் ரூபா நட்டஈட்டுத் தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version