நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் சந்திப்பிற்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த எதிர்ப்பு மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி பகுதியில் இன்று(10.06.2025) ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள சாணக்கியனின் அலுவலகத்தில் ஹிஸ்புல்லா சட்டத்தரணி ஒருவரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
சாணக்கியனின் ஏற்பாடு
இந்த சந்திப்பை சாணக்கியன் ஏற்பாடு செய்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
