Home ஏனையவை வாழ்க்கைமுறை முடி உதிர்வை நிறுத்தி, வளர்ச்சியை இரட்டிப்பிக்கும் இயற்கை மூலிகை எண்ணெய்

முடி உதிர்வை நிறுத்தி, வளர்ச்சியை இரட்டிப்பிக்கும் இயற்கை மூலிகை எண்ணெய்

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. உலர்ந்த செம்பருத்தி பூ- 1 கப்
  2. உலர்ந்த நெல்லிக்காய்- 1 கப்
  3. தேங்காய் எண்ணெய்- 1 லிட்டர்

பயன்படுத்தும் முறை

  1. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும்.
  2. பின் தேங்காய் எண்ணெயில் காய்ந்த செம்பருத்திப் பூக்கள் மற்றும் நெல்லிக்காய் கலந்து கொள்ளவும்.
  3. இந்த கலவையை குறைந்த வெப்பத்தில் சுமார் 20 நிமிடங்கள் சூடாக்கவும்.

  4. அதன் பிறகு, அடுப்பை அனைத்து இதனை நன்கு ஆற வைக்கவேண்டும்.
  5. ஆறிய பிறகு செம்பருத்திப் பூக்கள் மற்றும் நெல்லிக்காய் விதைகளை வடிகட்டி, எண்ணெயை சுத்தமான பாட்டில் ஊற்றவும்.
  6. அதன்பின் முதல் முடியின் நுனி வரை எண்ணெய் தடவி சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.

  7. இதனை குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு மென்மையான ஷாம்பூவுடன் தலைமுடியை நன்கு கழுவவும்.

Source: https://ibctamil.com/article/homemade-hair-oil-for-hair-growth-and-thickness-1754691308

NO COMMENTS

Exit mobile version