Home ஏனையவை வாழ்க்கைமுறை கொரிய கண்ணாடி தோலைப் பெற வேண்டுமா… வீட்டிலிருந்தே இதை செய்யுங்கள்….

கொரிய கண்ணாடி தோலைப் பெற வேண்டுமா… வீட்டிலிருந்தே இதை செய்யுங்கள்….

0

கொரிய தோல் பராமரிப்பு வழக்கத்தில் கண்ணாடி போன்ற தோல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும்.

தற்காலத்தில் எல்லோரும் பளபளப்பான சருமத்தை விரும்புவுதனால் அனைவரும் வெவ்வேறு அழகுச் சிகிச்சைகளை செய்து வருகின்றனர்.

அத்துடன் இதற்காக சந்தையில் விற்பனையாகத் தொடங்கியுள்ள பல விலையுயர்ந்த பொருட்களும் சருமத்தைப் பளபளப்பாக்குகின்றன.

ஆனால் அதன் விளைவு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்.

இதற்குப் பதிலாக தேனைப் பயன்படுத்தினால் நீங்கள் நீண்ட காலத்திற்கு சிறந்த பளபளப்பான சருமத்தை பெறலாம்.

இயற்கையான நீரேற்றம் 

அது குறித்து நோக்குகையில், முகத்தில் தேனைப் பூசுவது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது இயற்கையான நீரேற்றம் மற்றும் ஒக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.

அத்துடன் இது முகத்தை சுத்தப்படுத்த உதவுவதுடன் முகப்பரு மற்றும் தோல் பதனிடுதல் பிரச்சினையைக் குறைக்கிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் மென்மையாகத் தெரிகிறது.

எனவே நீங்கள் கண்ணாடி போன்ற தோலைப் பெற விரும்பினால், இதை பயன்படுத்தலாம்.

உங்கள் முகத்தில் வேறு எதையும் தடவுவதற்கு உங்களுக்கு நேரம் இல்லையென்றால், நீங்கள் தேனைப் பயன்படுத்தலாம்.

சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்

தேனைக் கொண்டு ஒரு face pack உருவாக்குங்கள். இதைப் பயன்படுத்துவதால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும், அது தெளிவாகத் தெரியும்.

எப்படி செய்வது?

இதற்கு நீங்கள் ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி தேன் எடுக்க வேண்டும்.

இதில் நீங்கள் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லைக் கலக்க வேண்டும்.

இப்போது அதில் ஷீட் மாஸ்க்கை நனைத்து முகத்தில் தடவவும்.

பின்னர் அதை 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.


இதற்குப் பிறகு, முக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் முகத்தை தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.

இதைப் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

இந்த முறையில் தேனைப் பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் வறட்சி தோன்றாது. மேலும் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் நீங்கள் விரும்பினால் அதை உங்கள் முகத்தில் நேரடியாகப் பூசி தினமும் மசாஜ் செய்யலாம்.

இதை எல்லா சருமத்திலும் தடவலாம்.

உங்களுக்கு ஏதேனும் தோல் தொடர்பான பிரச்சினை இருந்தால், சருமம் தொடர்பான நிபுணர்களின் அறிவுரையை பெற்றுக்கொள்வது சிறந்தது.

NO COMMENTS

Exit mobile version