Home இலங்கை சமூகம் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

0

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் எவ்வாறு சரியாக வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) விளக்கமளித்துள்ளார்.

அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கும் முறைகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

வாக்களிக்கும் முறை 

அதன்படி, முதலாவது வாக்கினை ‘1’ என்றும் விருப்பு வாக்குகளை ‘2’ மற்றும் ‘3’ என்றும் குறிக்கலாம்.

அத்துடன் ஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, ‘1’ அல்லது ‘X’ எனக் குறிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது ‘1’ மற்றும் ‘X’ என்ற இரண்டையும் குறிக்க வேண்டாம்.

அத்துடன் ‘X’ அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம்.

மேலும் 1 2 3 4 5 6 போன்ற பல இலக்கங்களையும் குறிக்க வேண்டாம். சரியாக வாக்களிக்காத அனைத்து வாக்குகளும் நிராகரிக்கப்படும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version