Home இலங்கை சமூகம் சற்று முன்னர் நீதிமன்ற வழக்கிற்காக சென்றவேளை அனர்த்தம் : ஒருவர் பலி ஐவர் படுகாயம்

சற்று முன்னர் நீதிமன்ற வழக்கிற்காக சென்றவேளை அனர்த்தம் : ஒருவர் பலி ஐவர் படுகாயம்

0

பொலன்னறுவை(polonnaruwa), வெலிகந்த சிங்கபுர பகுதியிலிருந்து வெலிகந்த நோக்கிச் சென்ற கெப் வண்டியொன்று இன்று (15) பிற்பகல் சிங்கபுர 11 ஆவது கிலோமீற்றர் பகுதியில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் சூரியவெவ சிங்கபுர, இலக்கம் 154 இல் வசித்து வந்த 54 வயதான கே.டி. வசந்த உதயசிறி என விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த காவல்துறையினர் கூறினர்.

பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதி

விபத்து இடம்பெற்ற போது, ​​கெப் வண்டியில் ஆறு பேர் பயணித்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய ஐவரும் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி சமந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் 21 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் வெலிகந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நீதிமன்ற வழக்கிற்காக சென்றவேளை சம்பவம்

நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக பொலனறுவைக்கு சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version