Home இலங்கை அரசியல் மன்னாரில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

மன்னாரில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

0

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து மாபெரும்
பொதுக்கூட்டமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பொதுக் கூட்டம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13.09.2024) மாலை 4.30 மணியளவில் மன்னார்
நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச
சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

அமோக வரவேற்பு

இதன்போது, ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனுக்கு மன்னார் மக்கள்
அமோக வரவேற்பு வழங்கியுள்ளனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட
சட்டத்தரணி சிறிகாந்தா, அரசியல் ஆய்வாளர்
நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளின்
பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version