Home இலங்கை அரசியல் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை வழங்கும் மனித வள நிறுவனங்கள்

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை வழங்கும் மனித வள நிறுவனங்கள்

0

Courtesy: Sivaa Mayuri

அரசியல் கட்சிகள், தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்ளும் வகையில் மக்களை அழைப்பதற்காக, மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்று வருவதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்த நிறுவனங்கள் சுமார் முழு நாள் நிகழ்வுக்காக ஒரு நபருக்கு 3,000 ரூபாயையும், குறுகிய காலத்துக்கு 1,500 ரூபாயையும் அறிவிடுகின்றன.

இந்த அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டத்தை கூட்டிச் செல்வதாக விஜயதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திரக் கட்சி வாக்காளர்கள்

இதேவேளை, நாட்டிலுள்ள 5 மில்லியன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்காளர்களின் ஆதரவுடன் தாம் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version