Home இலங்கை பொருளாதாரம் டிரான் அலஸ் இன் மோசடி விசா முறையால் 100 மில்லியன் டொலர் இழப்பு

டிரான் அலஸ் இன் மோசடி விசா முறையால் 100 மில்லியன் டொலர் இழப்பு

0

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் அறிமுகப்படுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா முறை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கருத்திறனை மையமாக கொண்டே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரும் போது இணைய வழியாக வீசா பெற்றுக் கொள்ளும் முறை நீண்டகாலமாக வழக்கத்தில் இருந்து வந்தது.

டிரான் அலஸ்

எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் அதனை மாற்றி, இந்திய நிறுவனம் ஒன்றின் ஊடாக சுற்றுலா வீசா வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.

இதற்கமைய டிரான் அலஸ் அறிமுகப்படுத்திய புதிய முறையில் வீசா வழங்குவதற்கு கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டதுடன், வீசா பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 70 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையைத்தவிர்த்து வேறு நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதன் காரணமாக சுமார் 100 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version