அவிசாவளை, கெட்டஹெத்த பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை ஆயுதத்தால் அடித்துக் கொன்றுவிட்டு, பொலிஸ் நிலையத்திற்கு வந்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் திவுரும்பிட்டிய, கெட்டஹெத்த பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குடும்பத் தகராறு
சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
Source: https://tamilwin.com/article/husband-killed-wife-in-avissawella-1725334457
