Home இலங்கை அரசியல் தோற்றுப்போனால் வீட்டில் இருங்கள் : ரணிலுக்கு அநுர பதிலடி

தோற்றுப்போனால் வீட்டில் இருங்கள் : ரணிலுக்கு அநுர பதிலடி

0

நீங்கள் தோற்றிருந்தால், தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) பதிலடி கொடுத்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக விக்ரமசிங்க கூறியிருந்தார்.

எனினும் ரணிலின் இந்த அறிவிப்பை திஸாநாயக்க மறுத்தார், விக்ரமசிங்கவின் நிர்வாகத்தால் அத்தகைய ஒதுக்கீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறினார்.

“முந்தைய நிர்வாகத்தால் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நீங்கள் தோற்றிருந்தால், தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்,” என்று விக்ரமசிங்கவின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் திஸாநாயக்க, வலியுறுத்தினார்.

விக்ரமசிங்க முன்னர் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கூறியிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் வீழ்ச்சியடையும்

மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று கூறப்படும் கூற்றுக்களையும் திஸாநாயக்க மறுத்தார்.

தேசிய மக்கள் சக்தியின் முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார், “இந்த நாட்டிற்கான எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை நாங்கள் எமது செயற்பாட்டை நிறுத்த மாட்டோம்.”என்றார் அவர். 

NO COMMENTS

Exit mobile version