Home இலங்கை பொருளாதாரம் பின்னடைவுகள் இருந்தாலும் விரைவில் முடிவை எட்ட முடியும்: இலங்கை தொடர்பில் ஐ.எம்.எப் நம்பிக்கை

பின்னடைவுகள் இருந்தாலும் விரைவில் முடிவை எட்ட முடியும்: இலங்கை தொடர்பில் ஐ.எம்.எப் நம்பிக்கை

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் தனியார் கடன் வழங்குநர் கடன் மறுசீரமைப்பில் பின்னடைவுகள் இருந்தாலும், விரைவில் ஒரு முடிவை எட்ட முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஸ்ணா சீனிவாசன் இதனை குறிப்பிட்டுள்ளார்

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

மறுசீரமைப்பில் பின்னடைவு

இந்த பேச்சுவார்த்தைகளில் ஒரு பார்வையாளராக சர்வதேச நாணய நிதியத்தின் பங்கை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் துறை மறுசீரமைப்பில் பின்னடைவுகளை அவர், ஒப்புக்கொண்ட போதிலும், நடந்துகொண்டிருக்கும் உரையாடல் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையில் பணவீக்கம் குறைப்பு மற்றும் இருப்பு அதிகரிப்பு போன்ற பொருளாதார குறிகாட்டிகளின் முன்னேற்றங்களை சீனிவாசன் மேற்கோள்காட்டியுள்ளார்

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் உள்ள சவால்களைப் பற்றி அவர் எச்சரித்த் அவர், தொடர்ந்து சீர்திருத்தங்கள், குறிப்பாக நிதிக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்

குறிப்பிடத்தக்க வகையில், சீர்திருத்தத்திற்கான முக்கிய பகுதிகளாக நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் ஊழல் குறைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/imf-believes-in-sri-lanka-1714191358

NO COMMENTS

Exit mobile version