Home இலங்கை பொருளாதாரம் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

0

திறைசேரி உண்டியல்களின் ஏலவிற்பனை குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

ஒரு இலட்சத்து 500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 26 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.

திறைசேரி உண்டியல்கள்

அத்துடன் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.

364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version