Home இலங்கை அரசியல் தேர்தல்கள் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

தேர்தல்கள் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்

0

இந்த வருடம் ஒரு தேர்தல் மாத்திரமே நடத்தப்படும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

பதுளை நாரங்கல வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (19.07.2024) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் படி, ஜனாதிபதித் தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

அரசியலமைப்பின் பிரகாரம், ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.

இந்த ஆண்டு வேறு எந்த தேர்தல்களும் நடத்தப்படாது. ஜனாதிபதி தேர்தல் மட்டுமே நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/important-info-about-elections-sri-lanka-1721407394

NO COMMENTS

Exit mobile version