நாட்டின் தற்போதைய நிலைமையில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று இப்போது கூற முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன( Dinesh Gunawardena) தெரிவித்தார்.
எனினும், இந்த வருடமும், அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தத் தேர்தலையும் எந்நேரத்திலும் எதிர்கொள்ள ஆளுந்தரப்பு தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
தோற்கடிக்க முடியாது
ஆளுந்தரப்பை அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டிணைந்தாலும் கூடத் தோற்கடிக்கவே முடியாது என்றும் பிரதமர் தினேஷ் மேலும் தெரிவித்தார்.
Source: https://tamilwin.com/article/impossible-to-say-which-election-came-first-1714421043
