Home இலங்கை அரசியல் கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்கள் குறித்த இம்ரான் மஹரூப் கவலை

கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்கள் குறித்த இம்ரான் மஹரூப் கவலை

0

Courtesy: H A Roshan

கிழக்கு ஆளுநரது பிரத்தியேக நியமனங்களில் முஸ்லிம் ஒருவர் இல்லாதது கவலையைத் தருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர சமீபத்தில் அவரது பிரத்தியேக ஆளணியில் பிரத்தியேக செயலாளர், பொதுசன தொடர்பு உத்தியோகத்தர், ஊடகச் செயலாளர் என 3 நியமனங்களைச் செய்துள்ளார்.

சகலருக்கும் நீதியான சேவை

இந்த நியமனங்களில் முஸ்லிம் ஒருவரும் உள்வாங்கப்படாமை எனக்கு மிகவும் கலையைத் தருகின்றது.

கிழக்கு மாகாணம் 3 இனங்களும் வாழும் மாகாணம்.

இதில் முஸ்லிம்கள் கனிசமான தொகையினர்.

எனவே, இம்மாகாண முஸ்லிம்களது கலாசார பாரம்பரியங்கள் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் தெரிந்து கொண்டால் தான் சகலருக்கும் நீதியான சேவையை வழங்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version