Home இலங்கை அரசியல் தமிழர் பகுதியில் களமிறங்கும் சுயேட்சை குழுக்கள் தொடர்பில் கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு

தமிழர் பகுதியில் களமிறங்கும் சுயேட்சை குழுக்கள் தொடர்பில் கோவிந்தன் கருணாகரம் குற்றச்சாட்டு

0

சுயேட்சைகள் தாங்கள் வாக்கெடுக்காவிட்டாலும்
பரவாயில்லை தமிழினத்திற்கு துரோகம் இழைப்பதற்காகவே அவர்கள் இம்முறை
போட்டியிடுகின்றார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்
முதன்மை வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (G. Karunakaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றையதினம் (20.10.2024) நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் பொது தேர்தலானது வட கிழக்கிற்கு ஒரு முக்கியமான
தேர்தலாக காணப்படுகின்றது.

சுயேட்சை குழுக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்திலே பல சுயேட்சை குழுக்கள்
இம்முறை களமிறங்கப்பட்டுள்ளன.

அவர்கள் பல ஆயிரக் கணக்கான நிதியை செலவிட்டு
அரசியல் செய்கின்றனர்.

இது யாருக்காக இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின்
வாக்குகளை பிரித்து மாற்றினத்த வருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற
காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் ஒரு தேசியக் கட்சியில் முதன் முறையாக ஒரு
சிங்கள இனத்தவர் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலே களமிறக்கப்பட்டுள்ளார்.

 நாடாளுமன்றத் தேர்தல்

இதன்
பின்னணிகளை நோக்கும்போது சுயேட்சைகள் தாங்கள் வாக்கெடுக்காவிட்டாலும்
பரவாயில்லை தமிழினத்திற்கு துரோகம் இழைப்பதற்காகவே அவர்கள் இம்முறை
போட்டியிடுகின்றார்கள்.

மாவட்டத்திலுள்ள மக்கள் எமது கட்சிக்கு பூரண ஆதரவினை
தந்து இம்முறை தேர்தலில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என அவர் இதன்போது
குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version