Home இலங்கை அரசியல் இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் அநுர அரசு : மோடி வருகையுடன் கைச்சாத்திடப்படவுள்ள பல்வேறு ஒப்பந்தங்கள்

இந்தியாவுடன் நெருக்கம் காட்டும் அநுர அரசு : மோடி வருகையுடன் கைச்சாத்திடப்படவுள்ள பல்வேறு ஒப்பந்தங்கள்

0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்(narendra modi) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​இலங்கையும்(sri lanka) இந்தியாவும்(india) பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான பல இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) இன்று(02) தெரிவித்தார்.

ஏப்ரல் 4 ஆம் திகதி பிரதமர் மோடி இலங்கைக்கு வருவார் என்றும், ஏப்ரல் 5 ஆம் திகதி காலை சுதந்திர சதுக்கத்தில் அவரை வரவேற்கும் விழா நடைபெறும் என்றும் அவர் வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் தெரிவித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை

அதே நாளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும், பின்னர் கலந்துரையாடல்கள் குறித்து ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார், தம்புள்ள குளிர்பதன சேமிப்பு வசதியைத் திறந்து வைப்பார் மற்றும் சில மதத் தலங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சூரிய மின் அலகுகளை கொழும்பிலிருந்து ஒன்லைனில் திறப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடருந்து சமிக்ஞை அமைப்பு திறப்பு 

ஏப்ரல் 6 ஆம் திகதி பிரதமர் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதிக்குச் சென்று மகாவ-அனுராதபுரம் பாதையில் தொடருந்து சமிக்ஞை அமைப்பைத் திறந்து வைப்பார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version