Home விளையாட்டு இந்தியாவை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது இலங்கை அணி

இந்தியாவை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது இலங்கை அணி

0

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றிபெற்றதுடன் ஊடாக இலங்கை அணி இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ( Avishka Fernando) அதிகபட்சமாக 96 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ்(Kusal Mendis) 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலளித்த இந்திய அணி

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் றியான் பராக்(Riyan Parag) 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 26.0 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

ஆதிக்கம் செலுத்திய இலங்கை பந்துவீச்சாளர்கள்

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோகித் சர்மா( Rohit Sharma ) அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், வோஷிங்டன் சுந்நதர்(Washington Sundar) 30 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே (Dunith Wellalage) 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதன்படி 27 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணியும் இந்திய அணியும் மாத்திரம் பங்கேற்ற ஒருநாள் தொடர் ஒன்றை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டே இந்திய அணிக்கு எதிரான இதுபோன்ற தொடரை இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய இணைப்பு

இந்திய அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் தொடரில் இலங்கை அணி அதிரடியான ஆரம்பத்தை மேற்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பத்தும் நிசங்க, அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

முதலாம் இணைப்பு

இந்திய (india) மற்றும் இலங்கை (srilanka) இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்ததாலும், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணி 

இலங்கை – இந்திய அணிகள்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதாலும், இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கை அணி தொடரை வெற்றிக்கொள்ளும். 

இந்திய அணி வெற்றி பெற்றால் போட்டி சமநிலையில் முடியும்.

இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், அது இலங்கைக்கு கிடைத்த மூன்றாவது ஒருநாள் தொடராக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதோடு, மேலும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளின் பின்னர் வெற்றிகொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version