புதிய இணைப்பு
டித்வா புயலால் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஒபரேஷன் சாகர் பந்துவின் கீழ் அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை இந்தியா அனுப்பியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும் நிலைமை சீரடையும்போது மேலும் உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது.
இந்தியா விமானப்படை
இலங்கையின் ஏற்பட்டுள்ள சீரற்ற பேரிடர் காலநிலைக்கு உதவும் முகமாக இந்தியா விமானப்படை உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
“டித்வா” புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால், இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள அதன் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்திலிருந்து ஹெலிகொப்டர்களை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
