Home இலங்கை அரசியல் இந்திய உயர்ஸ்தானிகர் ஹரிணி எம். பி. சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் ஹரிணி எம். பி. சந்திப்பு

0

இந்திய உயர்ஸ்தானிகர் எச். இ. சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவுக்கும் (Harini Amarasuriya) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (23) இடம் பெற்றுள்ளது.

இந்தியா – இலங்கை 

இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாக்கவின் (Anura Kumara Dissanayake ) வெற்றிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா (India) – இலங்கை (Sri Lanka) இருத்தரப்பு முயற்சிகள் குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர்  ஹரிணி அமரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்களித்துள்ளார்.

இதே வேளை இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று (23)  காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

NO COMMENTS

Exit mobile version