Home முக்கியச் செய்திகள் விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

0

விதை நெல் உற்பத்தி பண்ணைகளில் நெல் அறுவடைக்காக காப்பீட்டுத் திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு வாரியம் அறிவித்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி, பூச்சி தாக்குதல்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் காட்டு யானை ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களை இந்த காப்பீடு திட்டம் உள்ளடக்கியுள்ளது.

திட்டத்தின் முக்கிய நோக்கம்

இதன்படி, ஒரு பருவத்திற்கு ஏக்கருக்கு ரூ. 13,600 தொகையை செலுத்துவதன் மூலம், விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 180,000 வரை இழப்பீட்டை பெறுவார்கள்.

காப்பீட்டுத் தொகையைப் பெற, விதை நெல் பண்ணைகள் விவசாய திணைக்களத்தின் விதைச் சான்றிதழ் சேவையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

விதை நெல் உற்பத்தியை ஊக்குவிப்பதும், விவசாயிகளை அறுவடைகளில் தக்கவைத்துக்கொள்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

NO COMMENTS

Exit mobile version