Home முக்கியச் செய்திகள் அரச நிறுவனத்திற்கு நடிகையின் கட்டடம் : விசாரணைகள் ஆரம்பம்

அரச நிறுவனத்திற்கு நடிகையின் கட்டடம் : விசாரணைகள் ஆரம்பம்

0

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்கு வாடகை அடிப்படையில் நடிகை ஒருவரின் கட்டடம் எடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டடத்தை வாடகை அடிப்படையில் பெறுவதற்காக 66 கோடி ரூபா வைப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், கட்டடம் கையளிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும் வைப்புத் தொகை மீளப் பெறப்படவில்லை எனவும் விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

எதிர்கால நடவடிக்கைகள்

அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவித்து, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டடம் பிரபல நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமானது. 

NO COMMENTS

Exit mobile version