Home இலங்கை அரசியல் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் இணையுமாறு அழைப்பு

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் இணையுமாறு அழைப்பு

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

 

இளைஞர்களுக்கு வாய்ப்பு

அடுத்த பொதுத் தேர்தலுக்காக கட்சி மறுசீரமைக்கப்படும் என்றும், திறமையான இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

NO COMMENTS

Exit mobile version