Home விளையாட்டு இலங்கைக்கு திரும்பியுள்ள சிஸ்கே வீரர்கள்: வெளியான காரணம்

இலங்கைக்கு திரும்பியுள்ள சிஸ்கே வீரர்கள்: வெளியான காரணம்

0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களான பத்திரன, தீக்சன இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இலங்கை கிரிக்கெட் வீரர்களான பத்திரன, தீக்சன இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ரி20 உலகக்கிண்ண தொடருக்கான அணியில் அவர்கள் இடம்பெற்றிருப்பதால், கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி

வெளியான காரணம்

ஐபிஎல் தொடரானது இறுதிகட்டத்தை எட்டும் நிலையில், இவர்களின் வருகை
சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

குறிப்பாக பத்திரனவின் பந்துவீச்சினால் சென்னை அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது எனலாம்.

இதுகுறித்து பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவிக்கையில், ” இலங்கை வீரர்கள் விசா பெற உள்ளனர். எனவே அவர்களின் அந்த செயல்முறைக்காக சென்றுள்ளனர். நாங்கள் எங்களின் அடுத்த போட்டியில் அவர்களை திரும்பப் பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: ஐதராபாத் அணியின் இடம் எது தெரியுமா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version