அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பையும் மீறி சுமார் 220 மில்லியன் டொலர் மதிப்புள்ள சுமார் 19 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் ஏற்றுச்சென்ற ஈரானின் கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று ஆசிய பசிபிக் பகுதியை அடைந்துள்ளதாக TankerTrackers.com கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து TankerTrackers.com வெளியிட்ட எக்ஸ் (X) பதிவொன்றில், ‘HUGE’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கப்பல் ஒரு வாரத்திற்கு முன்பு இலங்கைக்கு அப்பால் கடைசியாகக் காணப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த கப்பல் இந்தோனேசியாவின் லோம்போக் ஜலசந்தியைக் கடந்து ரியாவு தீவுக்கூட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
வெளியிட்ட பதிவு
ஏப்ரல் 13 அன்று, அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களுக்கு முற்றுகையை அறிவித்தபோது, HUGE ஈரானிய கடல் பகுதியில் இருந்தது.
அத்துடன் மார்ச் 20 அன்று மலாக்கா ஜலசந்தியிலிருந்து ஈரானுக்குப் புறப்பட்டதிலிருந்து, HUGE தானியங்கி அடையாள அமைப்பில் (AIS) எந்தத் தகவலையும் அனுப்பவில்லை.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறைந்தது 52 ஈரானியக் கப்பல்கள் அமெரிக்க முற்றுகையை மீறியதாக ஏப்ரல் 29 அன்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதற்கிடையில், முற்றுகை தொடங்கியதிலிருந்து ஈரானுடன் தொடர்புடைய சுமார் 41 கப்பல்களைத் தங்கள் பாதையைத் திருப்பும்படி கட்டாயப்படுத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/iranian-super-tanker-passes-sri-lankan-waters-1777788296
