Home இலங்கை சமூகம் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – 500 இற்கும் மேற்பட்டவர்கள் கைது

0

நாடளாவிய ரீதியில் நேற்று (13) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 27,786 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 590 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 14 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் விபரம்

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 233 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 121 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 27 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 13 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,546 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version