Home உலகம் லெபனானின் வானொலியையும் கைப்பற்றிய இஸ்ரேலிய மொசாட்! பெரும் தொகையில் வெளியேறும் மக்கள்!!

லெபனானின் வானொலியையும் கைப்பற்றிய இஸ்ரேலிய மொசாட்! பெரும் தொகையில் வெளியேறும் மக்கள்!!

0

 லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள உளவியல் நடவடிக்கை (அதாவது Psychological warfare) மிகப் பெரிய அதிர்வலைகளை லெபனானில் ஏற்படுத்திவருகின்றது.

லெபனானின் தொலைத்தொடர்புச் சேவைகளையும், லெபனானின் பிரதான ஒலிபரப்புச் சேவையும் ‘ஹக்’ செய்து கைப்பற்றிய இஸ்ரேலியப் படையினர், அதன் வழியாக மக்களைத் தொடர்புகொண்டிருந்தார்கள்.

‘ஹிஸ்புல்லாக்களின் தளங்கள், அலுவலகங்கள், முகாம்கள் போன்றனவற்றிற்கு அருகில் நீங்கள் வசித்தால் உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்றுசென்று உங்களதும், உங்களது குடும்பத்தினரதும் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்…’- இதுதான் தொலைபேசியின் ஊடாக லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மேற்கொண்ட எச்சரிக்கை.

குறுஞ்செய்திகளாகவும், ஒலிப்பதிவு செய்யப்பட்ட voice messgages ஆகவும்கூட லெபனான் மக்களுக்கு அனுப்பப்பட்ட இதுபோன்ற எச்சரிக்கைச் செய்திகள் லெபனான் மக்கள் மத்தியிலும், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ள உளவியல் தாக்கம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்: 

https://www.youtube.com/embed/PEqfybdZ1_0

NO COMMENTS

Exit mobile version