Home உலகம் இஸ்ரேல் இராணுவத்தின் மிருகத்தனமான செயல் : ஆரம்பமானது விசாரணை

இஸ்ரேல் இராணுவத்தின் மிருகத்தனமான செயல் : ஆரம்பமானது விசாரணை

0

பலஸ்தீனத்தின் மேற்குக்கரை நகரமான ஜெனினில் இராணுவ நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் தொடர்பில் இஸ்ரேல் இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரின்போது காயமடைந்த பலஸ்தீனர் ஒருவரை தங்கள் ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டி இஸ்ரேலிய படையினர் குழுவொன்று இந்த ஈவிரக்கமற்ற செயற்பாட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகிய காணொளி

இந்த நிகழ்வைக் காட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி இஸ்ரேல் இராணுவம் மீது பலரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு சந்தேக நபராக இருந்தாலும் கூட, காயமடைந்த நபருக்கு செய்ததை மன்னிப்பதில்லை என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த நபரின் குடும்பத்தினரின் வாக்குமூலம்

காயமடைந்த நபரின் குடும்பத்தினர், அவர்கள் அம்புலன்ஸ் ஒன்றைக் கேட்டபோது, ​​​​இராணுவத்தினர் அவரை அழைத்துச் சென்று, தங்கள் ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டிக்கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.  

https://www.youtube.com/embed/0VcKVhM4JqE?start=33

Source: https://ibctamil.com/article/israeli-army-strapped-wounded-palestinian-to-jeep-1719130328

NO COMMENTS

Exit mobile version