Home உலகம் பலியான ஈரான் இராணுவ வீரர்கள்…! இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

பலியான ஈரான் இராணுவ வீரர்கள்…! இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

எந்த ஒரு தாக்குதலுக்கும் கடுமையான சரிவிகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை கட்டாயம் கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

எங்கள் நாட்டு மக்களின் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கும் உரிமை என்பது எங்களுக்கு உண்டு. இந்த நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்“ என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் வான்வழித் தாக்குல்

லெபானான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா முக்கிய தலைவர்களை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், இஸ்ரேல் மீது கடந்த 1ஆம் திகதி 180 இற்கும் மேற்பட்ட சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வீசியது.

இந்தப் பின்னணியில், ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தற்போது நடத்தியுள்ளது.

தெஹ்ரானின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது.

தற்காப்பு நடவடிக்கை

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை தற்காப்பு நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, வன்முறையின் சுழற்சியை உடைப்பதற்காக இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறுகையில், “இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். இதன்மூலம் இந்த வன்முறையின் சுழற்சி மேலும் தொடராமல் முடிவுக்கு வரும்.

இஸ்ரேலின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்காக இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.

மேலும், மக்கள் வசிக்கும் இடங்களைத் தவிர்த்து, இராணுவ இலக்குகளையே இஸ்ரேல் குறிவைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் அமெரிக்கா பங்கேற்கவில்லை. தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதுமே எங்களின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/AxFVy-NPSnU

NO COMMENTS

Exit mobile version