இலங்கைக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்து விட்டுள்ளதாகவும் நிலங்களை வாங்கி குவித்து வருவதாகவும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
சமூக ஊடகங்களிலும், ஊடக விவாதங்களிலும் அரசியல் மேடைகளிலும் இலங்கையில் யூதர்களுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
அவர்கள் யூத மத பிரச்சாரங்களை இலங்கையில் மேற்கொண்டு வருதாகவும் சில முஸ்லிம்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளார்கள்.
அறுகம் குடா என்ற பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு யூத நிலையமொன்றுக்கு எதிராக குண்டுத்தாக்குதலை நடத்துகின்ற அளவுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டதும் அமெரிக்க உளவு அமைப்பின் எச்சரிக்கைக்கு பின்னர் அந்தத் தாக்குதல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எதற்காக இலங்கையில் யூதர்கள் வருவதான பேச்சுக்கள் அண்மைக்காலமாக என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன?
இஸ்ரேலியர்கள் எதற்காக இலங்கைக்கு வந்து குடிய அமர வேண்டும்? …இவ்வாறான பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்துடன் வருகிறது இன்றை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி….
https://www.youtube.com/embed/dUYrULsrj4c
