Home இலங்கை அரசியல் ரணிலின் நரித்தனம் அம்பலப்படுத்திய மனோ கணேசன்

ரணிலின் நரித்தனம் அம்பலப்படுத்திய மனோ கணேசன்

0

இந்தியாவின் (India) கடனுதவியே இலங்கையை(Sri Lanka) வரிசை யுகத்தில் இருந்து மீட்டது. ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) அல்ல என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரசார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன், இந்திய தேசம்தான், எமது நாட்டை காப்பாற்றியது என்ற அடிப்படை உண்மையை மறைத்து தான் ஏதோ நாட்டை காப்பாற்றியது போல் போகும் இடமெல்லாம் ரணில் விக்ரமசிங்க கூறி வருகிறார்.

இந்திய அரசின் தொடர் கடன்

இலங்கை ரூபா பெறுமதியில், 120,000 இலட்சம் ரூபாய்களுக்கு நிகரான, 400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவியை இந்திய அரசு தந்ததால்தான், பெட்ரோல், உணவு, காஸ், மருந்து வரிசைகள், மின்வெட்டுகள், உர தட்டுபாடு ஆகியவற்றில் இருந்து எமது நாடு காப்பாற்றபட்டது.

இலங்கைக்கு இந்திய அரசின் தொடர் கடன் (Indian Credit Line) நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய அரசு, 2021ம் வருடம், டிசம்பர் மாதம், கொள்கைரீதியாக முடிவு எடுத்தது.

அதன் பிறகு, 2022ம் வருட மே மாதம் பிரதமராகவும், ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் ரணில் பதவிகளை ஏற்றார்.

சுய முயற்சி

ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றை கொண்டு வரவில்லை. இந்த உதவிகள் இந்திய அரசு, இலங்கை மக்களுக்கு, இலங்கை நாட்டுக்கு வழங்கிய பெரும் உதவிகளாகும்.

ஆனால், இவை தனது சாதனைகள் என ரணில் வழமை போல் நரித்தனமாக கூறி வருகிறார் என மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version