Home இலங்கை அரசியல் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள்

0

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய (ITAK) பிரதிநிதிகளுக்கும் இந்திய
உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல்,
தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள்
தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய
நாடாளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்து
கொண்டனர்.

மேலும் கலந்துக் கொண்டோர்

மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகர சபை முதல்வர், இளைஞர்
அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து
கொண்டதோடு, திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்கமுடியாத காரணத்தினால்
வருகை தர முடியவில்லை.

கோரிக்கை

அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால்
கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் இவர் கிழக்கு மாகாணத்தில் Indian High Commission அலுவலகத்தினையும்
அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். 

NO COMMENTS

Exit mobile version