Home இலங்கை அரசியல் யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுக்களை கையளித்த தமிழரசு கட்சி

யாழில் சிறீதரன் தலைமையில் வேட்பு மனுக்களை கையளித்த தமிழரசு கட்சி

0

யாழ். மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, வேட்பு மனுக்களை கையளித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (10.10.2024) இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

புதிய வேட்பாளர்கள்

அத்துடன், எஸ்.சி.சி.இளங்கோவன், சட்டத்தரணி கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராஜா பிரகாஷ் ஆகியோரும் யாழ். மாவட்ட வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version