Home இலங்கை அரசியல் யாழில் ஆரம்பமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

யாழில் ஆரம்பமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

0

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைமையில் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான வேதனாயகனின் பங்கேற்புடன் இடம்பெறறுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று( 17.07.2025) காலை 9.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.  

பல விடயங்கள் ஆராய்வு 

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே இன்றையதினமும் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version