Home இலங்கை சமூகம் மணப்பெண் அலங்கார போட்டியில் சர்வதேச நாடுகளை பின்தள்ளிய ஈழத்தமிழ் பெண்

மணப்பெண் அலங்கார போட்டியில் சர்வதேச நாடுகளை பின்தள்ளிய ஈழத்தமிழ் பெண்

0

கம்போடியாவில் (Cambodia) நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த பெண்ணொருவர் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் (Anitha Vinayakandan) என்பரே இவ்வாறு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் வருடாவருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறும்.

அலங்கார போட்டி

இதனடிப்படையில், கம்போடியாவில் குறித்த போட்டியானது நேற்றைய தினம் (18) நடைபெற்றுள்ளது.

இந்தநிலையில், 19 நாடுகள் பங்குபற்றியிருந்த இந்த போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு போட்டியாளர்கள் பங்கு பற்றியுள்ளனர்.

இதில் அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version