Home முக்கியச் செய்திகள் யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

0

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு நாட்களுக்கு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சேவை இரத்து

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடல் சீற்றம் மற்றும் சூறைக் காற்று வீசும் என்பதாலும், கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Source: https://ibctamil.com/article/jaffna-kangesanthurai-nagapattinam-ferry-service-1729000955?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version